வறிய நிலையில் உள்ள பெண்களுக்கான வாழ்வாதார உதவிகள்


மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வாதாரம் குறைந்த பெண்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் செயற்பாடுகள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி முன்னெடுத்துவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்லடி,நாவலடி,திருச்செந்தூர்,நொச்சிமுனை ஆகிய பகுதிகளில் உள்ள வறிய நிலையில் உள்ள குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. 

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவியும் முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான திருமதி செல்வி மனோகர் தலைமையில் இன்று இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது சுமார் 150 குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கான கோழிக்குஞ்சுகள் வழங்கிவைக்கப்பட்டன.

சுவிஸ் உதயம் அமைப்பின் உதவியுடன் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி முன்னெடுத்த இந்த வாழ்வாதார மேம்பாட்டு திட்ட நிகழ்வில் மகளிர் அணி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.