வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம்


(குகதர்சன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேசத்தின் நூறாண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஆலயமான வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் இன்று புதன்;கிழமை நடைபெற்றது.

வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு நேற்று செவ்வாய்க்கிழமை எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்று இன்று புதன்;கிழமை மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதன்போது கலச பூசைகள், விக்கிரகங்களுக்கு அபிஷேக பூசைகள் உட்பட்ட பல பூசைகள் இடம்பெற்றதுடன், குறித்த பூசையின் நூற்றுக்கணக்கான பக்கதர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கும்பாபிஷேக பூசைகள் யாவும் தெல்லிப்பளை துர்க்காபுரம் ஸ்ரீதுர்க்கா தேவி தேவஸ்தான முதன்மை சிவாச்சாரியார் பிரம்மஸ்ரீ. சுந்தர செந்தில்ராஜா சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது.

நேற்று செவ்வாய்க்கிழமை எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்று இன்று புதன்கிழமை மஹா கும்பாபிஷேகமும் இடம்பெற்றதுடன், அதனை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூசைகள் இடம்பெற்று எதிர்வரும் மே மாதம் 18ம் திகதி சங்காபிஷேகமும் பாற்குட பவணியும் இடம்பெறவுள்ளது.

வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலயமானது வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் நூறாண்டுகள் பழைமை வாய்ந்த ஆலயமான திகழ்ந்து வருகின்றமையால் பக்தர்கள் அதிகம் வருகை தந்துள்ளமை குறிப்பிடப்பிடத்தக்கது.