போரதீவுப்பற்றில் மோசமான நிலையில் உள்ள வீதிகளை புனரமைக்கும் பணிகள்


(ரஞ்சன்)

மட்டக்களப்பு,போரதீவுப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட சங்கர்புரம் கிராமத்தில் நீண்டகாலமாக மிகவும் மோசமான நிலையில் இருந்த வீதிகளை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

கிராமம் சங்கபுரம் கிராமத்தில் உள்ள வீதிகளை பிரதேசசபை ஊழியர்களின் பங்களிப்புடனும் பிரதேசசபை தவிசாளர் யோ.ரஜனி தமிழ்தேசிய கூட்டமைப்பின் வட்டாரஅமைப்பாளர் தேவன் மற்றும் இளைர்களின் ஒத்துளைப்புடனும் இந்த நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.

 குண்டும் குழியுமாக உள்ள வீதிகளை புனரமைத்து தருமாறு இப்பிரதேச மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துவந்தனர்.போரதீவுப்பற்று பிரதேசசபையினால் வீதிகள் கனரக வாகன உதவியுடன் வீதிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றனர்.

இதன் புனரமைப்பு பணிகளை போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி நேரடியாக சென்று பார்வையிட்டு உதவிகளை வழங்கினார்.