மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

பராமரிப்பு மற்றும் திருத்த வேலை காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டக்களப்பின் சிலப்பகுதிகளில் மின்சாரம் தடைப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மின்பொறியியலாளர் அலுவலகத்தினால் மின் பாவனையாளர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டக்களப்பு பிரதேச மின்பொறியியலாளர் அலுவலக பிரிவுக்குட்பட்ட மட்டிக்கழி, புன்னைச்சோலை, பாலமீன்மடு, கருவேப்பங்கணி, அமிர்தகழி, திராய்மடு, மாமாங்கம், திருமலை வீதி, மட்டக்களப்பு பொதுச்சந்தை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளவுள்ள திருத்தவேலை காரணமாக மின்சார தடை ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.