இரண்டாவது நாளாகவும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு

கொரனா அச்சுறுத்தல் காரணமாக சுகாதார துறையினரின் அறிவுறுத்தல் காரணமாக பொலிஸாரினால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கும் சட்டம் காரணமாக இரண்டாவது நாளாகவும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மூடப்பட்டுள்ளன.

ஊரடங்கும் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளும் இரண்டாவது நாளாகவுமு; மூடப்பட்டுள்ளன.

பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த பொலிஸ் ஊரடங்கு சட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் மக்கள் தமது வீடுகளில் இருந்து அன்றாட கடமைகளை நிறைவேற்றிவருவதை காணமுடிகின்றது.

அவசர தேவைகள் கருதியும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோரும் வழமைபோன்று தமது பணிகளை முன்னெடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளதையும் காணமுடிகின்றது.