சக்தி கலாமன்றத்தினால் 6ம் கட்ட நிவாரணப் பணி முன்னெடுப்பு


(எஸ்.நவா)
தற்போது எற்பட்டிருக்கின்ற கொவிட் 19 வைரஸ் தாக்கத்தின் போது வாழ்வாதாரங்களை இழந்து நிக்கதியாகியுள்ள போரதீவுப்பற்று பிரிவில் நெல்லிக்காடு கிராமத்தில் உள்ள 80 குடும்பங்களுக்கு வெல்லாவெளி சக்தி கலாமன்றத்தினால் நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
பிரான்சில் தொழில் புரியும் திருமதி.நந்தினிதேவி நிஷாதரன் குடும்பத்தினர் ரூபா 115000 நிதியுதவி சக்தி கலாமன்றத்துக்கு வழங்கப்பட்டு  80 குடும்பங்களுக்கு ரூபா 1500 பெறுமதியான நிவாரணப் பொதிகள் அவர்களின் சொந்த இடமான நெல்லிக்காட்டுக் கிராமத்தில் உள்ள மிகவும் வறுமையான குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.