சீயோன் தேவாலய முன்றிலில் குண்டுத்தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களுக்கு அஞ்சலி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றன.இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நினைவேந்தல்கள் நடைபெற்றுவருகின்றன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கடும் சேதத்தினையும் உயிரிப்பினையும் எதிர்கொண்ட மட்டக்களப்பு சீயோன் தேவாலய முன்றிலில் உயிரிழந்தவர்களுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

குறித்த தேவாலயம் மீது ஸக்ரான் தலைமையிலான ஐஸ்ஐஸ் தீவிரவாதிகள் நடாத்திய குண்டுத்தாக்குதலில் 31பேர் உயிரிழந்ததுடன் 80க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

இவர்களை நினைவுகூரும் வகையில் சீயோன் தேவாலய முன்றிலில் மக்கள் மெழுதிரிக்கு ஒளியூட்டி அஞ்சலி செலுத்தினர்.

தேவாயலத்தின் நிர்மாணப்பணிகள் பூர்த்தியடையாத நிலையில் பிரதான வாயில் மூடப்பட்டு அந்த இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.