மட்டக்களப்பு தாண்டவன்வெளி சந்தியில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் இன்று உயிரிழந்துள்ளார்.
தாண்டவன்வெளி சந்தியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் இருவர் படுகாயமடைந்தனர்.
மட்டக்களப்பு வாவிக்கரை வீதியினை சேர்ந்த எஸ்.மதுசன் எனும் 25 வயது இளைஞன் கவலைக்கிடமான முறையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்து நடந்த தினமான அன்று ஊரடங்கின் காரணமாக பூட்டி வைத்திருந்த மதுபான சாலைகள் அனைத்தும் திறக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பில் மதுபானங்களை கொள்வனவு செய்வதில் பலர் ஆர்வம் காட்டினர்,
இதனால் மோட்டார் சைக்கிள் போக்குவரத்துக்கள் அதிகமான நிலையில் தனது வேலைத்தளத்திலிருந்து மதிய உணவுக்காக வீடு சென்ற போது மதுபான போத்தல்கள் வாங்கிய இன்னுமொரு இளைஞர் இவர் மீது மோதிய போதே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த நேரத்தில் தாண்டவன்வெளி சந்தியில் இருந்த சமிக்ஞை விளக்குகளும் எரியாத நிலையிலேயே காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தாண்டவன்வெளி சந்தியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் இருவர் படுகாயமடைந்தனர்.
மட்டக்களப்பு வாவிக்கரை வீதியினை சேர்ந்த எஸ்.மதுசன் எனும் 25 வயது இளைஞன் கவலைக்கிடமான முறையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்து நடந்த தினமான அன்று ஊரடங்கின் காரணமாக பூட்டி வைத்திருந்த மதுபான சாலைகள் அனைத்தும் திறக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பில் மதுபானங்களை கொள்வனவு செய்வதில் பலர் ஆர்வம் காட்டினர்,
இதனால் மோட்டார் சைக்கிள் போக்குவரத்துக்கள் அதிகமான நிலையில் தனது வேலைத்தளத்திலிருந்து மதிய உணவுக்காக வீடு சென்ற போது மதுபான போத்தல்கள் வாங்கிய இன்னுமொரு இளைஞர் இவர் மீது மோதிய போதே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த நேரத்தில் தாண்டவன்வெளி சந்தியில் இருந்த சமிக்ஞை விளக்குகளும் எரியாத நிலையிலேயே காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

