உலகையே உலுக்கிவரும் கொரனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்குமாறு வேண்டியும் கொரனா தொற்றினால் உயிர்நீர்த்தவர்களின் ஆத்மசாந்திவேண்டியும் தொடர்ச்சியாக மத அனுஸ்டானங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்தில் இன்று கொரனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்குமாறு வேண்டியும் கொரனா தொற்றினால் உயிர்நீர்த்தவர்களின் ஆத்மசாந்திவேண்டியும் விசேட யாகபூஜை நடாத்தப்பட்டது.
இன்று அற்புத சக்தி படைத்த மூலிகைகள் கொண்டு இந்த தன்வந்திரி மகா யாகம் நடாத்தப்பட்டது.
ஆலயத்தின் பிரதமகுரு கிரியா கலாபமணி, கிரியாஜோதி, திருமுருககலாமணி, ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ மா.குலேந்திரரூப சர்மா தலைமையில் இந்த மகா யாகம் நடைபெற்றது.
இதன்போது மூலிகைகள் கொண்டு யாகம் நடாத்தப்பட்டதுடன் மந்திரிக்கப்பட்ட மகா கும்பம் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூலமூர்த்தியாகிய முருகப்பெருமானுக்கு அபிசேகம் செய்யப்பட்டது.
இந்த யாகத்தின்போது கொரனா தொற்றினை இல்லாமல்செய்து நாட்டினை சுபீட்சத்திற்கு கொண்டுவர இறையாசிவேண்டப்பட்டதுடன் நாட்டினை சிறந்த முறையில் கொண்டுசெல்லும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் நல்லாசிவேண்டி பூஜைகளும் நடாத்தப்பட்டன.
இன்றைய இந்த யாக பூஜையின்போது ஆலய நிர்வாகத்தினர் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்தில் இன்று கொரனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்குமாறு வேண்டியும் கொரனா தொற்றினால் உயிர்நீர்த்தவர்களின் ஆத்மசாந்திவேண்டியும் விசேட யாகபூஜை நடாத்தப்பட்டது.
இன்று அற்புத சக்தி படைத்த மூலிகைகள் கொண்டு இந்த தன்வந்திரி மகா யாகம் நடாத்தப்பட்டது.
ஆலயத்தின் பிரதமகுரு கிரியா கலாபமணி, கிரியாஜோதி, திருமுருககலாமணி, ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ மா.குலேந்திரரூப சர்மா தலைமையில் இந்த மகா யாகம் நடைபெற்றது.
இதன்போது மூலிகைகள் கொண்டு யாகம் நடாத்தப்பட்டதுடன் மந்திரிக்கப்பட்ட மகா கும்பம் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூலமூர்த்தியாகிய முருகப்பெருமானுக்கு அபிசேகம் செய்யப்பட்டது.
இந்த யாகத்தின்போது கொரனா தொற்றினை இல்லாமல்செய்து நாட்டினை சுபீட்சத்திற்கு கொண்டுவர இறையாசிவேண்டப்பட்டதுடன் நாட்டினை சிறந்த முறையில் கொண்டுசெல்லும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் நல்லாசிவேண்டி பூஜைகளும் நடாத்தப்பட்டன.
இன்றைய இந்த யாக பூஜையின்போது ஆலய நிர்வாகத்தினர் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.