கொரனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டி வந்தாறுமுலையில் விசேட பூஜை

கொடிய கொரோனா வைரஸ்சிடம் இருந்து உலக மக்களை காப்பாற்ற வேண்டி இன்று மட்டக்களப்பில் கண்ணகியம்மன் ஆலயத்தில் விசேட மன்றாட்ட பூஜை நடாத்தப்பட்டது.

சிலம்போசை நாயகியாம் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் இந்த பூஜைகள் நடாத்தப்பட்டன.

உலகிலே வேகமாக பரவிக் கொண்டிருக்கின்ற கொரோனா வைரஸ் எனப்படும் உயிர்கொல்லி நோயில் இருந்து உலக மக்கள் விடுபடுவதற்காகவும் நிம்மதியைப் பெறவேண்டியும் இதன்போது பிரார்த்தனைகள் நடாத்தப்பட்ட

உலகிலேயே ஆட்டிப்படைக்கும் இந்த நோய்தாக்கத்தில் இருந்து இலங்கை மக்களையும் பாதுகாக்கும் வகையில் இதன்போது மன்றாட்டம் செய்யப்பட்டது.

ஆலய நிர்வாக சபையின் ஏற்பாட்டில்  நடாத்தப்பட்ட இந்த விசேட மன்றாட்ட பூஜையில் ஆலய நிர்வாகத்தினர்,பூசாரிகள் மட்டுமே கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.