வவுணதீவில் அடிகாயங்களுடன் பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை வவுணதீவு மூன்றாம் கட்டை பகுதியில் உள்ள வயல் பகுதியில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வுhழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் த.சிவராஜா (55வயது) என்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று காலை தனது காணிகள் வந்தவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.
.
குறித்த பொலிஸார் அடித்துக்கொலைசெய்யப்படுள்ளதாக தெரிவித்துள்ள வவுணதீவு பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.