தம்பலகாமம் விபத்தில் ஒருவர் பலி-21பேர் படுகாயம்

திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 21பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கொழும்பு-திருகோணமலை பிரதான வீதியில் தரித்து நின்ற பஸ் மீது கொழும்பில் இருந்துவந்த சொகுசு பஸ் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை தம்பலகாமம் பஸ் விபத்தில் காயமடைந்த 21 பேர் இதுவரை திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.