கோறளைப்பற்று கிரான் வாகனேரி கிராமத்தில் வறுமைக்கோட்டிட்குட்பட்ட இருபத்தைந்து மாணவர்களுக்கு வாமதேவன் அகிலன் அவர்களினால் கற்றல் உபகரணங்கள் வாகனோரி காமாச்சி இளைஞர் கழக காரியாலயத்தில் இன்று (11.02) நடைபெற்ற நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டது.
வாமதேவன் அகிலனின் தாயாரின் ஞாபகார்த்தமாக கோறளைப்பற்று கிரான் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி விந்தியனின் வேண்டுகோளுக்கிணங்க மாணவர்களுக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் வாகனேரி கிராம சேவகர் எஸ்.ரவீந்திரன், காமாட்சி இளைஞர் கழக தலைவர் ஐ.பார்த்தீபன், மீனவர்சங்க தலைவர் ஓவியராசா ஆகியோர் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.