இரண்டாம் இணைப்பு - சந்திவெளியில் கொடூர விபத்து! தந்தையும் மகனும் பலி

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட சந்திவெளியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு மூவர் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்ப்பட்டுள்ளனர்.


இன்று(16) காலை மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதி சந்திவெளியில் மட்டக்களப்பில் இருந்து கிரான் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற சிரிய ரக லொரியொன்றும் நேருக்கு நேர் மோதியதில்  விபத்து இடம்பெற்றுளது.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயனிந்துச் சென்ற நால்வரில் பதுளை நுனுகலையைச் சேர்ந்த ரங்கன் ராமசாமி (71 வயது) என்பவரே சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார் சடலம் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. ஏனைய மூவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற சிரியரக லொரியினது சாரதி ஏறாவூர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

இரண்டாம் இணைப்பு - 
Update 

இதே வேளை விபத்தில் படுகாயமடைந்து மட்டக்களப்பு பேதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரில் ஒருவரான  ராமசாமி விஜய்பாஸ்கர்
(41வயது) என்பவர் சிகிச்சைப் பலனின்றி உயிறிளந்துள்ளார்.

சற்றுமுன் வைத்தியசாலையில் உயிரிளந்தவர் விபத்தில் சம்பவ இடத்தில் உயிரிளந்தவரின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.