இன்றைய (14.02.2020)தினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்திலேயே இவ்வாறு சமாதான நீதிவானாகசத்தியப்பிரமானம் செய்த கொண்டார்.
மட்டக்களப்பு துறைநீலாவணையை பிறப்பிடமாகக் கொண்ட சசீந்திரன் ஆரம்பக்கல்வியைதுறைநீலாவணை மெதடிஸ்தமிசன் தமிழ் கலவன் பாடசாலையிலும் உயர்தரம் கலைப்பிரிவுதுறைநீலாவணை மகாவித்தியாலயத்திலும் பயன்றுள்ளார்.
அத்துடன் துறைநீலாவணை நவசக்தி இளைஞர் கழக ஸ்தாபகராகவும், சுதந்திரஊடகவியாலாளராகவும், கடந்த ஆண்டு முதல் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்புமாவட்ட வாலிபர் முன்னணி செயலாளராகவும் தனது சமுக மற்றும் அரசியல் சார் பணிகளைமேற்கொண்டு வருகின்றார்.
அதுமட்டுமன்றி 2010ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கையின் முதலாவது இளைஞர் பாராளுமன்றதேர்தலில் வெற்றி பெற்று மண்முனை தென் எருவில்பற்று பிரதேசத்தின் இளைஞர் பாராளுமன்றஉறுப்பினராகவும் சேவையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.