மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிசனின் புதிய உதவி பொதுமுகாமையாளர் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து வருகைதந்துள்ள இராமகிருஸ்ணமிசன் தலைவர் ஆகியோருக்கு இன்று மாலை மட்டக்களப்பில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
முட்டக்களப்பு இராமகிருஸ்ணமிசனுக்கு புதிய உதவி பொதுமுகாமையாளர் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய உதவி பொதுமுகாமையாளராக ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தர் நியமிக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு இராம கிருஸ்ண மிசனுக்கு தமிழ்நாடு,விழுப்புரம் இராம கிருஸ்ணமிசனின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி பரமசுகானந்தஜி மஹராஜ் வருகைதந்தார்.
இவர்களை வரவேற்கும் வகையில் மட்டக்களப்பு கல்லடி மணிக்கூண்டு கோபுரத்தில் இருந்து பெருமளவான பக்தர்கள் இராமகிருஸ்ணமிசன் பழைய மாணவர்களினால் வரவேற்பளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கொழும்பு இராம கிருஸ்ண மிசன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஆக்ஷராத்மானந்தஜி மற்றும் மட்டக்களப்பு இராம கிருஸ்ணமிஷன் முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷானந்தர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
சுpவானந்தா தேசிய பாடசாலை,விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவர்களின் பாண்ட் வாத்திய குழுவினரின் வரவேற்புடன் ஊர்வலமாக சுவாமிகள் அழைத்துச்செல்லப்பட்டனர்.
வீதிகளில் பக்தர்கள் நிறைகுடங்களை வைத்து சுவாமிகளை வரவேற்றதுடன் ஆசிகளையும் பெற்றுக்கொண்டனர்.
சுவாமிகள் இராம கிருஸ்ண மிசனை வந்தடைந்ததும் அங்குள்ள இராமகிருஸ்ணர் வழிபாட்டு மண்டபத்தில் பூஜைகள் நடைபெற்றன.
ஆதனை தொடர்ந்து பக்தர்களுக்கு சுவாமிகளினால் ஆசிர்வாதங்கள் வழங்கப்பட்டதுடன் பிரசாதங்களும் வழங்கிவைக்கப்பட்டன.இன்றைய வரவேற்பு நிகழ்வில் பெருந்தரளான மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
முட்டக்களப்பு இராமகிருஸ்ணமிசனுக்கு புதிய உதவி பொதுமுகாமையாளர் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய உதவி பொதுமுகாமையாளராக ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தர் நியமிக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு இராம கிருஸ்ண மிசனுக்கு தமிழ்நாடு,விழுப்புரம் இராம கிருஸ்ணமிசனின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி பரமசுகானந்தஜி மஹராஜ் வருகைதந்தார்.
இவர்களை வரவேற்கும் வகையில் மட்டக்களப்பு கல்லடி மணிக்கூண்டு கோபுரத்தில் இருந்து பெருமளவான பக்தர்கள் இராமகிருஸ்ணமிசன் பழைய மாணவர்களினால் வரவேற்பளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கொழும்பு இராம கிருஸ்ண மிசன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஆக்ஷராத்மானந்தஜி மற்றும் மட்டக்களப்பு இராம கிருஸ்ணமிஷன் முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷானந்தர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
சுpவானந்தா தேசிய பாடசாலை,விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவர்களின் பாண்ட் வாத்திய குழுவினரின் வரவேற்புடன் ஊர்வலமாக சுவாமிகள் அழைத்துச்செல்லப்பட்டனர்.
வீதிகளில் பக்தர்கள் நிறைகுடங்களை வைத்து சுவாமிகளை வரவேற்றதுடன் ஆசிகளையும் பெற்றுக்கொண்டனர்.
சுவாமிகள் இராம கிருஸ்ண மிசனை வந்தடைந்ததும் அங்குள்ள இராமகிருஸ்ணர் வழிபாட்டு மண்டபத்தில் பூஜைகள் நடைபெற்றன.
ஆதனை தொடர்ந்து பக்தர்களுக்கு சுவாமிகளினால் ஆசிர்வாதங்கள் வழங்கப்பட்டதுடன் பிரசாதங்களும் வழங்கிவைக்கப்பட்டன.இன்றைய வரவேற்பு நிகழ்வில் பெருந்தரளான மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.