சுத்தானந்தா பாலர் பாடசாலையில் இடம்பெற்ற கால்கோள் நிகழ்வு

மட்டக்களப்பு மாநகர சபையினால் நிர்வகிக்கப்படும் நாவற்குடா சுத்தானந்தா பாலர் பாடசாலையின் கால்கோள் நிகழ்வு இன்று (31.01.2020) காலை இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் திருமதி சுந்தரமதி வேதநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
2020ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வுடன் கால்கோல் விழா ஆரம்பமானதுடன், மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.
அத்துடன் அமானா நிதி நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கான சான்றிதல்களும் வழங்கி வைக்கப்பட்டன. 
இந்நிகழ்வில் ஆன்மிக அதிதியாக நாவற்குடா கங்காணிப்பிள்ளையார் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ உ.ஜெயகிருஷ்ணா குருக்கள் மற்றும் சிறப்பு அதிதிகளாக மாநகர ஆணையாளர் க.சித்திரவேல், பிரதி முதல்வர் க.சத்தியசீலன்‌, பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, மாநகர சபை உறுப்பினர் அந்தோனி கிருரஜன், மண்முனை வடக்கு பிரதேச முன்பள்ளி மேம்பாட்டுப் பொறுப்பாளர் தி.மேகராஜ், கிராமசேவை உத்தியோகத்தோர் வ.லவக்குமார் மற்றும் பெற்றோர் பழைய மாணவர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.