மயிலம்பாவெளி செல்லத்தம்பி தம்பிப்பிள்ளை இறைபதமடைந்தார் . மரண அறிவீத்தல்.





மயிலம்பாவெளி செல்லத்தம்பி தம்பிப்பிள்ளை இறைபதமடைந்தார் .


அரசடித்தீவை பிறப்பிடமாகவும் மயிலம்பாவெளி ஜனாதிபதி வீதியை வதிவிடமாக கொண்ட செல்லத்தம்பி தம்பிப்பிள்ளை நேற்று வெள்ளிக்கிழமை 13.12.2019 இறைபதமடைந்தார்.


அன்னார் அரச உணவு விடுதி ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர் என்பதுடன், மயிலம்பாவெளி முருகன் ஆலய பரிபாலனம் சபை, மற்றும்
மயிலம்பாவெளி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பரிபாலன சபைகளில் உறுப்பினராக இருந்து பல சமூகப்பணிகளை ஆற்றியவர் என்பதோடு,
மயிலம்பாவெளி  பிள்ளையார் கோவில்
வயலுர் வீரம்மாகளியம்மன் கோவில் உருவாக்கத்துக்கு  காரணகர்த்தாக்களாக இருந்தவர்களில்  ஒருவர்  என்பதும் குறிப்பிடத்தக்கது.


அன்னாரின் நல்லடக்கம் இன்று சனிக்கிழமை பி.ப 3.30 மணியளவில்  மயிலம்பாவெளி ஜனாதிபதி வீதியில் உள்ள அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு மயிலம்பாவெளி  இந்துமயானத்தில் இடம்பெறும்