அமிர்தகழியில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்தின் தேர்தல் பிரசார அலுவலகம் திறப்பு

பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார துபாய் கொடுக்கும் வகையில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்தின் அறிவிப்பினை சில வேட்பாளர்கள் கேவலப்படுத்திபேசுவதாகவும் இது இந்த நாட்டின் பெண்களை கேவலப்படுத்துவதற்கு சமன் எனவும் ஊவா மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் வேலாயுதம் ருத்திரதீபன் தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரசார நடவடிக்கைகளுக்கான தேர்தல் அலுவலகம் இன்று மாலை மட்டக்களப்பு அமிர்தகழியில் திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் மகளிர் அணி தலைவியுமான திருமதி சசிகலா விஜயதேவா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஊவா மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் வேலாயுதம் ருத்திரதீபன்,ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் வே.மகேஸ்வரன்,ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட முகாமையாளர் சசிதரன் கார்த்திக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது அதிதிகளினால் அலுவலகம் திறந்துவைக்கப்பட்டதுடன் தேர்தல் பிரசார உரைகளும் நடைபெற்றன.இந்த நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் மகளிர் அணி தலைவியுமான திருமதி சசிகலா, ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் வே.மகேஸ்வரன்,ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட முகாமையாளர் சசிதரன் கார்த்திக் ஆகியோர் உரையாற்றினர்.