வெல்லவூர் சுபேதனின் நதியில் நீந்தும் நட்சத்திரங்கள் நூல் வெளியீடு


வெல்லாவெளி சக்தி கலா மன்றத்தின் வெளியீட்டில் வெல்லவூர் சுபேதனின் நதியில் நீந்தும் நட்சத்திரங்கள் நூல் வெளியீட்டு விழா வெல்லாவெளி கலாச்சார மத்திய நிலையத்தில் (10) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது
கவிக்கோ வெல்லவுர்+ கோபால் தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் சட்டத்தரணி மு.கணேசராசா வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ஆனந்தசிறி ஆகியோர்கள் முதன்மை விருந்துனர்களாக கலந்து கொண்டனர்
மட்டு தமிழ்ச் சங்க தலைவர் சைவப்புரவலர் வி.ரஞசமூர்த்தி முதன்மை பிரதி பெற்றுள்ளதுடன் வெளியீட்டு உரையினை ஓய்வு நிலை அதிபர் த.விவேகானந்தம் நூல் நயவுரையை கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ர விரிவுரயாளர் க.மோகனதாசன் நிகழ்த்தவுள்ளனர். நூலாசிhயரை வெல்லாவெளி சக்தி கலாமன்றத்தினர் பொன்னாடைபோத்தி கௌரவிக்கப்பட்டு வாழ்த்து மடலும் வழங்கப்பட்டிருந்தது. குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவில் ஏராளமான கல்விமான்கள் பொதுமக்கள் சங்கங்கள் அமைப்புக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்