மட்டக்களப்பு மாநகர முதல்வருக்கு எதிராக களமிறங்கிய உறுப்பினர்கள்

மட்டக்களப்பு மாநகரசபை தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிசார்ந்த செயற்பாடுகளை மட்டுமே முன்னெடுத்துவருவதாகவும் மாநகரசபை உறுப்பினர்களின் சிறப்புரிமையினை மீறிவருவதாகவும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள் சிலர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இன்று பிற்பகல் மட்டக்களப்பு மாநகரசபையின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஈபிடிபி உறுப்பினர் ஆகியோர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நடாத்தினர்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அலுவலகத்தில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.

மாநகரசபை உறுப்பினர்கள் தங்களது பகுதிகளில் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர் கே.காந்தராஜா இதன்போது குற்றஞ்சாட்டினார்.

மட்டக்களப்பு மாநகரசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுவதாகவும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லையெனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மட்டக்களப்பு மாநகரசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் தங்களை ஒட்டுக்குழு என விமர்சனம் செய்வதாகவும் ஆனால் அவர்கள் ஒட்டுக்குழுக்களுடன் இணைந்தே ஆட்சி செய்கின்றார்கள் என்பதை மறந்துபோவதாகவும் ஈபிடிபி மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் எஸ்.சிவானந்தராஜா தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஈ.பி.டி.பி.உறுப்பினர் ஒருவரை தவிர தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டிருந்தனர்.