மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் முதலாம் நாள்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் முதலாம் நாள் திருவிழா நேற்று இரவு சிறப்பாக நடைபெற்றது.

இராபிரானால் வழிபட்ட வரலாற்றினைக்கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

ஆலயத்தின் முதலாம் நாள் திருவிழா நேற்று இரவு சிறப்பாக நடைபெற்றது.தம்பபூஜை,விசேட அபிசேக,ஹோம பூஜை நடைபெற்று வசந்தமண்டப பூஜை நடைபெற்றது.

வசந்த மண்டப பூஜையினை தொடர்ந்து சுவாமி உள்வீதியுலா நடைபெற்றதுடன் அதனைத்தொடர்ந்து உற்சவ பூஜைகள் நிறைவுற்றதை தொடர்ந்து நற்சிந்தனை வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.