ஏறாவூரில் உள்ள வீட்டின் நீர்த்தாங்கியிலிருந்து ஆயுதங்கள் மீட்பு

மட்டக்களப்பு ஏறாவூரில் உள்ள வீட்டின் நீர்த்தாங்கியில் இருந்து கைக்குண்டுகள் மற்றும் துப்பாக்கி  தோட்டாக்கள் மீட்கப்பட்டது.

இன்று பகல் கிடைத்ததகவலுக்கமைய அங்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் சோதனைசெய்யப்பட்டு இவைகள் மீட்கப்பட்டுள்ளன .

விசேட அதிரடிப்படையினர், இரானுவத்தினர் மற்றும் பொலிசார் இணைந்து இந்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்த ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர்.

கூரையின் நீர்த்தாங்கியில் இருந்து கைக்குண்டுகள் இரண்மு மற்றும் ரீ56ரக துப்பாக்கிக்கான 63  தோட்டாக்கள் மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட கைக்குண்டை ஏறாவூர் புன்னக்குடா பகுதியில் விசேடஅதிரடிப்படையினரால் செயலிழக்கவைக்கப்பட்டது.

இது தொடர்பாக ஏறாவூர் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.