தேசிய ரீதியில் யோகா போட்டியில் மட்டு மண்ணுக்கு பெருமை.





கொழும்பில் இடம் பெற்ற யோகா போட்டியில் கலந்து கொண்டு  மட்டக்களப்பிற்கு பெருமை சேர்த்த நம்மவர்கள் .

மட்டு நகருக்கு பெருமை சேர்த்த மட்டு யோகா ஆரோக்கிய இளைஞர் கழகம் .

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தி உயஸ்தானிகர் நிறுவகம் மற்றும் அஸ்டாங்க யோகமந்தீர் - சுவாமி விவேகானந்தர் கலாச்சாரமையம் இணைந்து கடந்த 22.06.2019 ம் திகதி அன்று நடத்திய தேசிய யோகாசன வெற்றியாளர் போட்டியில் சுமார் 500க்கு மேற்பட்ட பல்வேறு வகையிலான மட்டத்தில் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்  .

அதில்  21-27 வயதுக்கு உட்பட்ட போட்டியில் மட்டுநகர் யோகா ஆரோக்கிய இளைஞர் கழகம் சார்பாக போட்டியிட்ட திரு குகானந்தன் 3ம் இடத்தையும் (வெண்கலபதக்கம்) திரு தனுசியன் 2ம் இடத்தையும்(வெள்ளிப்பதக்கம்) பெற்றனர்.


மேலும் 35-40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் திரு பிரதீபன் 1ம் இடத்தையும் (தங்கப்பதக்கம்) திரு ராஜேந்தர் 2ம் இடத்தையும்(வெள்ளிப்பதக்கம்) திரு பத்மராஜா 3ம் இடத்தையும (வெண்கல பதக்கம்) பெற்று மட்டுநகருக்கு பெருமை சேர்த்தனர்.


இந்த போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சார்பாக கலந்துகொண்ட போட்டியாளர்களையும் காணலாம்.