மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் போசோன் நிகழ்வு

தேசிய பொசோன் வாரத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இன்று காலை பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

பௌத்தர்களின் புனித நாளான பொசோன் முழுமதி தினத்தினை அடிப்படையாக கொண்டு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இந்த பொசோன் வாரத்தினை முன்னிட்டு பிரதேச செயலக ரீதியாக நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இன்று காலை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பொசோன் வார நிகழ்வுகள் மட்டக்களப்பு மங்கலராம விகாரையில் நடைபெற்றது.
மங்கலராம விகாரையினை சேர்ந்த அம்பிட்டிய சீலரத்ன தேரரின் அனுசாசனத்துடன் இந்த நிகழ்வு நடைபெற்றது.
பிரித் ஓதப்பட்டு தேரர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு உட்பட பல்வேறு நிகழ்வுகள் இன்று காலை நடைபெற்றன.