கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக்கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கு வகையில் எதிர்வரும் வியாழக்கிழமை கிழக்கு மாகாண மாகாணத்தில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண மாணவர் பேரவை என்னும் தலைப்பில் இதற்கான அழைப்பு துண்டுப்பிரசுரங்கள் மூலம் விடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துமாறு கோரி பல போராட்டங்களும் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்ட நிலையில் இதுவரையில் அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுவரையில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த நடவடிக்கை எடுக்காத அரசாங்கத்திற்கும் அரசியல்வாதிகளுக்கும் கண்டனம் தெரிவித்துள்ள கிழக்கு மாகாண மாணவர் பேரவை,தற்போது கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த கோரி மும்மதங்களின் மதத்தலைவர்களும் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவாக எதிர்வரும் 20ஆம் திகதி வியாழக்கிழமை கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் உள்ள வர்த்தக நிலையங்களையும் மூடி உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு மாணவர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.