சத்துருக்கொண்டானில் பாரிய தீ –பெருமளவான மரங்கள் நாசம்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் உள்ள தென்னை மற்றும் பனைகள் கொண்ட தோப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட அதேவேளை நூற்றுக்கணக்கான மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

இன்று மாலை மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட சத்துருக்கொண்டான் பகுதியில் உள்ள தென்னை மற்றும் பனைகள் கொண்ட தோப்பு ஒன்றில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைக்கும் படையினர் அப்பகுதிக்கு விரைந்து தீயினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.
இதன்போது 10 ஏக்கருக்கும் அதிகமான பகுதி தீயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீயினால் பயன்தரு நிலையில் இருந்த 200க்கும் மேற்பட்ட தென்னை மற்றும் பனை மரங்கள் தீயினால் எரிந்து நாசமாகியுள்ளதை காணமுடிந்தது.

இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தீ ஏற்பட்டது தொடர்பிலான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.