மட்டக்களப்பில் இருந்து கல்முனை போராட்ட களத்திற்கு குவியும் ஆதரவுக்கரம்

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக்கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்தும் மக்கள் ஆதரவு வழங்கிவருகின்றனர்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் இருந்து பெருமளவானோர் ஊர்வலமாக சென்று இன்றைய போராட்டத்தில் பங்குகொண்டனர்.

பெரியகல்லாறு பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்த ஆதரவினை வழங்கிவருகின்றனர்.

கல்முனை தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைவெற்றிபெறும் வரையில் தமது ஆதரவு தொடரும் என இங்கு கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த ஊர்வலத்தில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் நடராஜா,மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை பிரதி தவிசாளர் ரஞ்சனி உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.