புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் தீமிதிப்பு –பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புடைசூழ மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த உற்சவம், தீமிதிப்பு உற்சவத்துடன் நேற்று மாலை இனிதே நிறைவுபெற்றது.
இலங்கையில் உள்ள அம்மன் ஆலயங்களுல் அதிகளவில் பக்தர்கள் தீமிதிப்பில் கலந்துகொள்ளும் ஆலயமாக புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலயமாக விளங்குகின்றது.

கடந்த 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு திருக்கதவு திறத்தலும் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு ஆரம்பமானது.

கடந்த புதன்கிழமை அம்பாளின் கலியாணக்கால் வெட்டும் நிகழ்வ நடைபெற்றதுடன் தினமும் விசேட பூஜைகள் நடைபெற்றுவந்தன.

இதனை தொடர்ந்து நேற்று மாலை  மட்டக்களப்பு வாவியில் அன்னையின் சமுத்திர நீராடும் நிகழ்வு நடைபெற்று. அம்பாள் ஊர்வலமாக வந்து தீக்குளி காவல் செய்யப்பட்டு தீமிதிப்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த தீமிதிப்பு உற்சவத்தில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அடியார்கள் கலந்துகொண்டதுடன்  தீயில் இறங்கி தமது நேர்த்திக்கடன்களை  செலுத்தி கொண்டமை குறிப்பிடத்தக்கது.