மட்டக்களப்பில் ஸ்ரீ சபாரெத்தினம் நினைவுதினம் அனுஸ்டிப்பு

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் ஸ்ரீ சபாரெத்தினம் அவர்களின் 33வது ஆண்டு நினைவு நிகழ்வு இன்றைய தினம் தமிழீழ விடுதலை இயக்க மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொருளாளருமாகிய கோவிந்தன் கருணாகரம் தலைமையில் இடம்பெற்றது.

 இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் பிரதித் தவிசாளரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவருமான இந்திரகுமார் பிரசன்னா, மட்டக்களப்பு மாநரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மண்முனை தென்எருவில் பற்றுப் பிரதேசசபைத் தவிசாளர் ஞா.யோகநாதன், போராதீவுப் பற்றுப் பிரதேசசபைத் தவிசாளர் யோ.ரஜனி, மண்முனை தென்மேற்குப் பிரதேசசபைப் பிரதித் தவிசாளர் பொ.கோபாலப்பிள்ளை உட்பட மாநகரசபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், கட்சியின் இளைஞர் அணி உறுப்பினர்கள், கட்சிப் பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கட்சியின் பிரதித் தலைவரினால் ஸ்ரீ சபாரெத்தினம் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்தி சுடரேற்றப்பட்டதுடன், வருகை தந்தோரினால் மலரஞ்சலி செலுத்தப்பட்டு சுடரேற்றி அகவணக்கம் நிகழ்த்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.