கல்லடி கடற்கரையில் நடைபெற்ற நிறைவேந்தல் வார நிகழ்வு

முள்ளிவாய்க்கால் படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் நடைபெற்றது.

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் வாரம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தவிசாளரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான என்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் இலங்கையின் எட்டு மாவட்டங்களில் நடைபெற்றுவருகின்றது.

இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நிகழ்வு கல்லடி கடற்கரையில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்
தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தவிசாளரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான என்.கே.சிவாஜிலிங்கம்,முன்னாள் கிழக்கு
மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் உட்பட தவிசாளர்கள்,பிரதேசசபை,மாநகரசபை உறுப்பினர்கள்,கட்சி உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது முள்ளிவாய்க்கால் உட்பட வடகிழக்கில் உயிர்நீர்த்தவர்களுக்காக இரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.