தந்தைக்கு மலர் மாலை அணிவித்து மட்டக்களப்பில் மலரஞ்சலி .

(சசி துறையூர் )
இலங்கைத் தமிழரசு கட்சியின் நிறுவனர்
தந்தை செல்வா அவர்களின் 42வது ஆண்டு நினைவு தினம் 26/04/2019 இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு மட்டக்களப்பு  தந்தை செல்வா சதுக்கத்தில் அன்னாரின்  சிலைக்கு மலர்மாலை அணிவித்து  மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு   இலங்கை தமிழரசுக்கட்சியின்   ஏற்பாட்டில்  கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தலைமையில்    உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஷ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா,  பா.அரியநேத்திரன், மட்டு மாநகர முதல்வர்  தி . சரவணபவான், பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,  கிழக்கு மகாண முன்னாள் உறுப்பினர்களான மா.நடராசா, இ.பிரசன்னா ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்தோடு  ஜனநாயபோராளிகள் கட்சியின் மட்டக்களப்பு இணைப்பாளர் நகுலேஷ், மண்முனை தென்மேற்கு பிரதேசசபை தவிசாளர்  சி.புஷ்பலிங்கம், ஏறாவூர் பற்று பிரதேச சபை உப தவிசாளர் சா.இராமச்சந்திரன் , மாநகரசபை உறுப்பினர்கள், வாலிபர் முன்னணி தலைவர் கி.சேயோன், மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணி தலைவர் லோ.திபாகரன், செயலாளர் க.சசீந்திரன், வாலிபர் முன்னணி உறுப்பினர்கள், மண்முனை வடக்கு இலங்கை தமிழரசுகட்சி தலைவர்  
வே. தவராசா பிரதேசசபை உறுப்பினர்கள் மாதர் அணி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டதுடன் தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு  மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தி    இரண்டு நிமிட அக வணக்கமும் செலுத்தப்பட்டது.