களுவாஞ்சிகுடி Wings Kinder Garten பாலர் பாடசாலை கலைவிழாவும் பரிசளிப்பும்

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுவாஞ்சிகுடி Wings Kinder Garten பாலர் பாடசாலையின்  கலைவிழாவும் பரிசளிப்பும் .நேற்று (09.12.2018) சனிக்கிழமை காலை 09.30 மணியளவில் களுவாஞ்சிகுடி சீ.மு.இராசமாணிக்கம் மண்டபத்தில்  Wings Kinder Garten பாலர் பாடசாலையின் அதிபர் தர்மநாயகி ஹரிஹரன் தலைமையில் இடம் பெற்றது


பிரதம அதிதியாக  ச.சசிகரன் செயலாற்றுப் பணிப்பாளர்,முன்பள்ளி பணியகம், மட்டக்களப்பு கௌரவ அதிதியாக  சா. பரணிதரன் வெளிக்கள உத்தியோகத்தர் படடிருப்பு கல்வி வலயம்முன்பள்ளி பணியகம், மட்டக்களப்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ் விழாவின் முதல் நிகழ்வாக அதிதிகளை மலர் மாலை அணிவித்து   வரவேற்பு இடம் பெற்றது.அதனை தொடர்ந்து மங்கல விளக்கேற்றலும் இறைவணக்கமும் இடம் பெற்றது.
Wings Kinder Garten பாலர் பாடசாலையின் அதிபர் தர்மநாயகி ஹரிஹரனின் தலைமையுரையை தொடர்ந்துஈ மழலைகளின் கலை நிகழ்வுகள் ஆரம்பமாகியது அந்த வகையில் பல கலை நிகழ்வுகள் இடம் பெற்றன. பங்கு பற்றிய மாணவர்களுக்கு பரிசில்கள் வளங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிட தக்க விடயம்.