ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் வரவுசெலவுத்திட்டம் நிறைவேற்றம்

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் வரவுசெலவுத்திட்டம் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் அமர்வு இன்று காலை தவிசாளர் நா.கதிர்வேலு தலைமையில் ஆரம்பமானது.

2019ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டம் தவிசாளரினால் முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து அது தொடர்பான விவாதகங்கள் நடைபெற்றன. 

இதன்போது உறுப்பினர்களுக்கு அதிகளவு நிதியொதுக்கீடுசெய்யவேண்டும் என்றவகையில் நடைபெற்ற கருத்து மோதல்கள் காரணமாக சபை 01மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் தொடர்ந்தது.

வரவுசெலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு நடாத்தப்பட்டபோது அதற்கு ஆதரவாக 26 உறுப்பினர்கள் வாக்களித்துடன் இருவர் எதிராக வாக்களித்தனர்.மூன்று பேர் சபைக்கு சமூகமளிக்கவில்லை.

இதன்காரணமாக 2019ஆம் ஆண்டுக்கான ஏறாவூர்ப்பற்று பிரதேசபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.