தேற்றாத்தீவு தரிசனம் முன்பள்ளியின் கலைவிழாவும் பரிசளிப்பும்

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு தரிசனம் முன்பள்ளியின் கலைவிழாவும் பரிசளிப்பும் முன்பள்ளியின் தலைவர் என்.துரைரஜ் தலைமையில் தேற்றாத்தீவு சிவகலைவித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் சனிக்கிழமை கலை 09.30க்கு   இடம் பெற்றது .



இவ்  முன்பள்ளியின் கலைவிழாவும் பரிசளிப்பும்            விழாவிற்கு    ஆத்மீக அதிதிகளாக தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார்  ஆலய பிரதம சிவாச்சாரியார் மோஹனநந்த குருக்கள் மற்றும்  பிரதம அதிதியாக  .சசிகரன் செயலாற்றுப் பணிப்பாளர்,முன்பள்ளி பணியகம், மட்டக்களப்பு கெளரவ அதிதியா சா.பரணிதரன் வெளிக்கள உத்தியோகத்தர், பட்டிருப்பு கல்வி வலயம் , பாலர் பாடசாலை பணியகம் பணியகம் இவ் விழாவின் முதல் நிகழ்வாக அதிதிகளை மலர் மாலை அணிவித்து வரவேற்பு இடம் பெற்றது.அதனை தொடர்ந்து மங்கல விளக்கேற்றலும் ,இறைவணக்கமும் இடம் பெற்றது.
முன்பள்ளியின் தலைவர் தலைமையுரையை தொடர்ந்து மழலைகளின் கலை நிகழ்வுகள்ஆரம்பமாகியது அந்த வகையில் கோலாட்டம், சுளகு நடனம்  போன்ற பலதரப்பட்ட நிகழ்வுகள் இடம் பெற்றதை தொடரந்து முன்பள்ளிமாணவர்களுக்கு பரிசில் வழங்கப்படன. அத்துடன் இவ் முன்பள்ளியில் ஆசிரியர்களுக்கு பெற்றோரினால் பரிசு பொதி வளங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்படதக்க விடயம்.