மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மாணவன் தேசிய ரீதியில் சாதனை

மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மாணவன் அகில இலங்கை கர்நாடக சங்கீதப்போட்டியில் தேசிய ரீதியில் முதல் இடத்தினைப்பெற்று சாதனை படைத்துள்ளார்.

கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சினால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட கர்நாடக சங்கீதப்போட்டியில் தனி இசையில் பங்குபற்றி மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் ஆரம்ப பிரிவு மாணவன் செல்வன் அருள்ஞானப்பிரகாசம் மேசாக்பிரசாத் முதல் இடத்தினைப்பெற்று இந்த சாதனையினை படைத்துள்ளார்.

இவரை பாடசாலை சமூகம் மற்றும் அதிபர்கள்,ஆசிரியர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இன்று காலை பாடசாலைக்கு வருகைதந்த குறித்த மாணவனை இந்துக்கல்லூரி அதிபர் இரா.சண்டேஸ்வரன்,பிரதி அதிபர் எஸ்.பிரான்சிஸ்,சங்கீத ஆசிரியர் திருமதி தமயந்தி குகதாசன் ஆகியோர் மாணவனை கௌரவித்தனர்.