நாவற்காடு அக்னிச் சிறகுகள் பேரவையினால் தந்தையை இளந்த மாணவிகளுக்கு கற்றல் உபகரணம் வழங்கப்பட்டது.



"மக்களின் வாழ்வு மேன்பட ஒன்றுபடுவோம் வென்றெடுப்போம்" எனும் மகுட வாசகத்தைக் கொண்டு நாவற்காடு அக்னிச் சிறகுகள் பேரவை மட்டக்களப்பு மாவட்டத்தில் பல சேவைகளை செய்து வருகின்றார்கள்.

அந்த வகையில் நேற்று (04.11.2018) மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் இருக்கின்ற விளாவட்டவான் மற்றும் ஈச்சந்தீவு ஆகிய கிராமங்களை சேர்ந்த தந்தையை இளந்து தரம் மூன்றில் கல்வி கற்கும் இரண்டு மாணவிகளுக்கு பல கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்கள்.

இன் நிகழ்வு அக்னிச் சிறகுகள் பேரவையின் தலைவர் ம.ஜெயக்கொடி தலைமையில் நடைபெற்றது.