தீமையை அழித்து நன்மை பிறந்த நாள் தீபாவளி.



(ஆ.நிதாகரன்)   உலகெங்கும் வாழும் இந்துக்களால் தீபாவளி திருநாள் இன்று(06) கொண்டாடப்
படுகின்றது.


தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர். கண்ணனுக்கு சாரதியாக சத்தியபாமாவை அழைத்தார். சத்தியபாமா ஒரு வீரமிக்க போருக்கு வேண்டிய அனைத்து வித்தைகளும் கற்றுத் தேர்ந்தவள். அவள் தேரோட்ட, யுத்தம் ஆரம்பமானது.

கடும் யுத்தம் தொடர, நரகாசுரன் தன் கடாயுதத்தை கண்ணன் மீது வீசினான். இதில் மாயக் கண்ணன் மயங்கி கீழே விழுந்தார். எல்லாம் வல்ல அந்த கண்ணனே மயங்கி விழுவதா என்று அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், காரணமில்லாமல் கண்ணன் மயங்கவில்லை. பூமாதேவியின் அம்சமான சத்தியபாமா ஒரு நிலையில் நரகாசுரனின் தாய் ஆகிறாள். அவள் கையால் நரகாசுரனின் மரணம் நிகழ வேண்டும் என்பதற்காக கண்ணன் நடத்திய நாடகம் தான் இது.
சத்தியபாமா கண்ணன் மயங்கி விழுந்ததைப் பார்த்து கோபத்தில் சீறிக்கொண்டு எழுந்தாள். என் கண்ணனுக்கா இந்த நிலைமை என்று அவள் மனம் கொதித்து எழ, அம்பை சரமாரியாக நரகாசுரன் மீது எய்தால். இதில், அவள் எய்த அம்பு நரகாசுரனை பதம் பார்க்க, அவனும் கீழே சாய்ந்தான். அப்போது மயங்கி விழுந்தது போல் நடித்துக்கொண்டிருந்த கண்ணன் எழுந்து வந்தார். உயிர் பிரியும் நிலையில் சத்தியபாமாவைப் பார்த்து அம்மா என்று நரகாசுரன் அழைத்தான்.
கேட்ட வரம் அளித்தல்
அந்தக் குரல் கேட்ட பாமாவிற்கு தன்னுடைய முன்பிறவி நினைவிற்கு வந்தது. பூமாதேவியின் வடிவமும் கொண்டாள். தன் மகனை மடியில் தாங்கிக்கொண்டு கதறி அழுதாள். இதனைக் கண்ட நரகாசுடன் தாயே கலங்காதீர்கள். தங்கள் கையினால், நான் மடிவதில் எனக்கு மகிழ்ச்சியே என்றான்.
பின்னர், கண்ணன் நாராயண்னாக மாறி அவர்கள் அருகில் வந்தார். நாரகா! உன் வரத்தின் படியே நீ முடியவேண்டும் என்பதற்காகவே சத்தியபாமாவை உடன் அழைத்து வந்தேன். அவள் கையினாலேயே உன் விருப்பம் நிறைவேறியதல்லவா என்று அவர் கூறினார். தந்தையே உலகில் தோன்றிய எந்த உயிரும் மறைந்தே தீரும் என்ற உண்மை என்னால் நிரூபிக்கப்பட்டுவிட்டது என்று கதறினான். பின்னர், அவர்களுக்கு மஹாவிஷ்ணு காட்சி அளித்து அவனுக்கு தேவையான வரத்தைக் கொடுப்பதாகச் சொன்னார்.
நரகாசுரனோ தான் இறக்கும் இந்நாளை எல்லோரும் காலையில் ஸ்னானம் செய்து, புத்தாடை உடுத்தி பின் தீபங்கள் ஏற்றிக் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். இதன் காரணமாகே நரகாசுரன் இறந்த நாளை நாடு முழுவதும் தீபாவளி திருநாளாக கொண்டாடி மகிழ்கின்றனர்.

இப்போது கூட இலங்கை  மட்டுமின்றி, இந்தியா, நேபாளம், மியான்மர்,சிங்கப்பூர், மலேசியா,பிஜி, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலும் இந்தப் பண்டிகையை மக்கள் கொண்டாடுகிறார்கள்.