தேசிய சேமிப்பு வங்கியின் 42வது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில்
மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் “ இரத்தம் கொடுப்போம் உயிரைக் காப்போம்
உங்கள் உதிரம் ஓர் உயிரைக் காக்கட்டும் “ எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு கிளை
முகாமையாளர் வி எஸ் .சுவேந்திரன் தலைமையில்
மாபெரும் இரத்ததான முகாம் மட்டக்களப்பு கிளை அலுவலகத்தில் நடைபெற்றது
.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில்
நிலவுகின்ற இரத்த பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த இரத்ததான
முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இரத்ததான முகாம் காலை 08.30 மணி முதல் பிற்பகல் 01.30 மணி வரை நடைபெற்றது .
இந்த இரத்ததான முகாமில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த
வங்கிப்பிரிவு வைத்தியர் ,வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் ,வங்கி ஊழியர்கள் , வாடிக்கையாளர்கள் என பலர்
கலந்துகொண்டனர்