“ இரத்தம் கொடுப்போம் உயிரைக் காப்போம் உங்கள் உதிரம் ஓர் உயிரைக் காக்கட்டும் இரத்ததான முகாம் “


(லியோன்) 

தேசிய சேமிப்பு வங்கியின் 42வது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் “  இரத்தம் கொடுப்போம் உயிரைக் காப்போம் உங்கள் உதிரம் ஓர் உயிரைக் காக்கட்டும் “ எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு கிளை முகாமையாளர் வி எஸ் .சுவேந்திரன்  தலைமையில் மாபெரும் இரத்ததான முகாம் மட்டக்களப்பு  கிளை அலுவலகத்தில்  நடைபெற்றது
.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் நிலவுகின்ற இரத்த பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இரத்ததான முகாம்  காலை 08.30 மணி முதல் பிற்பகல் 01.30 மணி வரை நடைபெற்றது .

இந்த இரத்ததான முகாமில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப்பிரிவு வைத்தியர் ,வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் ,வங்கி ஊழியர்கள் , வாடிக்கையாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்