கிரான்குளம் மதிசுதன் பிரியங்கன் பாகிஸ்தான் பயணம்.





மண்முனைப்பற்று பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன அமைப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளன ஒழுக்க குழு உறுப்பினருமான மதிசுதன் பிரியங்கன்
கடந்த வாரம் (27.10.2018) பாகிஸ்தான் இஸ்லாமாபாத்க்கு பயணம்.

எதிர்வரும் 03, 04 /11/2018 ல் சர்வதேச ரீதியாக 12 நாடுகள் பங்குற்றும் இளைஞர் மகாநாட்டில் பங்குபற்றும் வகையிலே கிரான்குளம் வள்ளுவர் இளைஞர் கழக தலைவர்  பிரியங்கன்
இலங்கையிலிருந்து சென்ற 30 பேர் கொண்ட குழுவில் வடகிழக்குமாகாணத்தையும் மட்டக்களப்பு மாவட்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 இளைஞர் கழகங்களுக்கூடாக இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் அர்ப்பணிப்புடன் செயற்படும் இளைஞர் யுவதிகளை ஊக்குவிப்பும் கெளரவமும் செய்யும் வகையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இத்தகைய  வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்து வருகின்றது.