முன்னால் மாவட்ட சம்மேளன தலைவர் இந்தியா பயணம்.




முன்னால் மாவட்ட சம்மேளன தலைவர் இந்தியா பயணம்.

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளன முன்னால் தலைவரும், மண்முனை பற்று ஆரையம்பதி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவருமான எஸ்.திவ்வியநாதன் புதுடில்லிக்கு நேற்று திங்கட்கிழமை  பயணம். 

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் இந்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் அழைப்பின் பிரகாரம் இலங்கையிலிருந்து 25 பேர் அடங்கிய குழு ஒன்பது நாள் சுற்றுப்பயணமாக இலங்கையிலிருந்து திங்கட்கிழமை அதிகாலை புறப்பட்டுச்சென்றன. 
இக்குழுவில் ஆரையம்பதியைச்சேர்ந்த எஸ்.திவ்வியநாதன் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்தி கலந்து கொள்கிறார்.

இளைஞர் அபிவிருத்தி, வேலைத்திட்டம் தொடர்பாக அந் நாட்டினுடைய அனுபவபகிர்வுகளை அறிந்து கொள்ளும்வகையில் இந்த சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.