(லியோன்)
மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக
கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட
சுற்றுலாத் துறைவிடுதி உரிமையாளர்கள் மற்றும் முகாமையாளர்களுக்காக 05 நாட்கள் கொண்ட பயிற்சி பாசிக்குடாவில் நடைபெற்றது.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் திறன்
அபிவிருத்தி அமைச்சின் நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைவாக உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான
தேர்ச்சித்திட்டத்தின் மாவட்ட வர்த்தக
கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் தலைவர்
ஜனாப்.எம்.எச்.எம்.நளீம் அவர்களின் வழிகாட்டலில் பாசிக்குடா தனியார்
விடுதியில் இப்பயிற்சிகள் நடைபெற்றன.
இப்பயிற்சி நெறியில் மாவட்டத்திலுள்ள சுற்றுலாத்துறை விடுதி
உரிமையாளர்கள் மற்றும்
முகாமையாளர்கள் பங்குபற்றினர்.
இதில்
சுற்றுலாத்துறையின் வேலைத்தளம், சூழலை சுகாதாரம் மிக்க பாதுகாப்பானதாக பராமரித்தல் ,விடுதிகள்
குறித்து நல்லதொரு அபிப்பிராயத்தை வாடிக்கையாளர்
மனதில் ஏற்படுத்தல், விருந்தோம்
பற் குழுவின் அங்கத்தவராக வினைத்திறனுடன் பணியாற்;றல்,
உணவு சம்பந்தப்பட்ட விடயங்களுடன் பணியாற்றுவதாயின் பாதுகாப்பான உணவை
வழங்குவதை உறுதிப்படுத்தல் போன்ற விடயங்கள் குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டன.
பயிற்சி இறுதிநாள்
நிகழ்வில் மாவட்ட இணைப்பாளர்
திருமதி.மரினா மட்டக்களப்பு மாவட்ட
வர்ததக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின்
உத்தியோகத்தர்கள், சுற்றுலாத்துறை
விடுதி உரிமையாளர்கள் மற்றும் முகாமையாளர்கள் ஆகியோர்
கலந்துகொண்டனர்.
இதில் வளவாலர்களாக ஜெயபாலன் மற்றும் .டினே~;ஆகியோர் கலந்துகொண்டனர்.
நடைபெற்ற இரண்டாவது குழு
பயிற்சி நெறியில் மட்டக்களப்பு
மாவட்டத்திலுள்ள 22 சுற்றுலாவிடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் முகாமையாளர்கள் பங்குகொண்டதுடன் எதிர்வரும் மாதங்களில் மேலும் 3 குழு
பயிற்சிகள் நடைபெறவுள்ளதுடன் 96 சுற்றுலா விடுதிகளின் 384 பேருக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும்
மட்டக்களப்பு மாவட்ட வர்தத ககைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி
.கே.குகதாஸ் தெரிவித்தார்.
இந்தப்பயிற்சித் திட்டத்தில்
பங்கு பற்றிய சுற்றுலாவிடுதிகளின்
உரிமையாளர்கள் மற்றும்
முகாமையாளர்கள் இப்பயிற்சிகளின் நிறைவில்
தங்களது விடுதியில் கடமை புரியும் ஊழியர்களுக்கு பயிற்சிகளை வழங்கும் வகையில் இத்
திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.