கலைஞரின் மறைவுக்கு இலங்கை தமிழரசு கட்சி பதாதை கட்டி அஞ்சலி செலுத்தியது.



தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் மறைவுக்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அலுவலகத்தில் பதாதை கட்டி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 07ம் திகதி உயிர் நீத்த   தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டு நேற்றைய தினம் இப்பதாதை கட்சி அலுவலகத்தில் கட்டப்பட்டிருந்தது.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பிலும் நகர்ப் பகுதிகளில் பதாதைகள் கட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.