மண்முனை வடக்கு பிரதேச செயலாளராக தயாபாரன் கடமைகளை பொறுப்பேற்பு

மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக மட்டக்களப்பு,குருக்கள்மடத்தினை சேர்ந்த மாணிக்கவாசகர் தயாபரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுமதியுடன் ஒத்துமாறல் அடிப்படையில் வெருகல் பிரதேச செயலாளாராக கடமையாற்றிய மாணிக்கவாசகர் தயாபரன் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளராக கடமையாற்றிய கே.குணநாதன் வெருகல் பிரதேச செயலகத்திற்கும் இடமாற்றம்பெற்றுசென்றுள்ளார்.

சிரேஸ்ட நிர்வாக சேவை அதிகாரியான மாணிக்கவாசகர் தயாபரன் 1991ஆம்ஆண்டு ஆலையடிவேம்பு பிரதேச செயலாளராக முதல் நியமனத்தினைப்பெற்றுக்கொண்டதுடன் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு,திறைசேரி,மாவட்ட செயலகம்,மாகாணசபை உட்பட பல்வேறு திணைக்களங்களில் பல்வேறு உயர் பதவிகளை வகித்துவந்துள்ளார்.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரதேச செயலாளாராக நியமிக்கப்பட்டுள்ள மாணிக்கவாசகர் தயாபரன் மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தின் பழைய மாணவராவார்.

இன்று காலை மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட பிரதேச செயலாளருக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வரவேற்பளித்தனர்.