(லியோன்)
மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற ஆலயமான மட்டக்களப்பு வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலய வருடாந்த திருவிழா பங்குதந்தை அருட்பணி இன்னாசி ஜோசப் அடிகளாரின் தலைமையில் கொடியேற்றப்பட்டு திருவிழா ஆரம்பமானது
இன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலய திருவிழா
எதிர்வரும் 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
காலை
இடம்பெறவுள்ள கூட்டுத்திருப்பலியுடன் நிறைவுபெறவுள்ளது
இந்த விசேட கூட்டுத் திருப்பலியினை
மட்டக்களப்பு மறை மாவட்ட
ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினால்
ஒப்புகொடுக்கப்பட்டவுள்ளது
ஆலய திருவிழா நவநாள் காலங்களில் விசேட திருப்பலிகள்
இடம்பெற்று எதிர்வரும் 28 ஆம் திகதி
சனிக்கிழமை மாலை அன்னையின் திருச்சொரூப பவனியும் விசேட நற்கருணை
வழிபாடுகளுடன் திருப்பலியும் ஒப்புகொடுக்கப்படும்
இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலய வருடாந்த
திருவிழாவின் முதல் நவநாள் திருப்பலியினை “
படைப்பின் சிகரம் மனிதன் – அவன் மேல் படைத்தவரின் சமூக அக்கறை :” எனும் தலைப்பில்
அருட்பணி நிகஸ்ரன் பீற்றஸ் அடிகளாரின் தலைமையில் பங்கு மக்கள் இணைந்து
திருப்பலியை ஒப்புகொடுத்தனர்