மாவட்ட மட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள விளையாட்டு விழா


(லியோன்)
  
மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் திணைக்களமும் , மாவட்ட செயலகமும் இணைந்து மட்டக்களப்பு  மாவட்டத்தின் 14 பிரதேச செயலங்களுக்கிடையில் நடத்தப்பட்ட 2018 ஆம் ஆண்டுக்கான மாவட்ட மட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான  தடகள  விளையாட்டு விழா நிகழ்வுகள்  மாவட்ட  மேலதிக அரசாங்க அதிபர் திருமதி .சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் மட்டக்களப்பு வெபர்  மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது


 2018 ஆம் ஆண்டுக்கான மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள விளையாட்டு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபரும் , மாவட்ட செயலாளருமான எம் .உதயகுமார் கலந்துகொண்டார்

மாவட்ட மட்டத்தில் 14  பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  விசேட தேவையுடையவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளின் இறுதி போட்டி நிகழ்வுகள் இன்று நடைபெற்றது   

மட்டக்களப்பு  மாவட்டத்தின் 14  பிரதேச செயலங்களுக்கிடையில் நடத்தப்பட்ட   2018 ஆம் ஆண்டுக்கான மாவட்ட மட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான  தடகள விளையாட்டு விழா போட்டிகளில்  பங்குபற்றி வெற்றிபெற்ற விசேட தேவையுடையவர்களுக்கும் , விசேட தேவையுடைய பாடசாலை  மாணவர்களுக்கும்  நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளினால்  பரிசில்களும்  வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

இந்நிகழ்வில் மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் எ .நவேஸ்வரன் , வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ் .சுதாகர் , ஆரையம்பதி பிரதேச செயலாளர் திருமதி எம் .சத்தியானந்தி ,ஏறாவூர் பிரதேச செயலாளர்  வி யூசுப்  ,வெல்லாவெளி பிரதேச செயலாளர் ஆர் .ராகுலநாயகி , மற்றும் மாவட்ட செயலக சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் ,  மாவட்ட செயலக அதிகாரிகள் , பிரதேச செயலகங்களின் சமூக சேவைகள் பிரிவு உத்தியோகத்தர்கள் ,மாவட்ட  விசேட தேவையுடைய கழகங்களின் மற்றும் நிறுவனங்களின்  உறுப்பினர்கள் , ஆசிரியர்கள் ,மாணவர்கள் , பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்