துறைநீலாவணை மாகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம் புதிதாக ஆரம்பம்


துறைநீலாவணை மாகா வித்தியாலய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்திற்கான  புதிய நிருவாகம் கடந்த வாரம் தெரிவு செய்யப்பட்டது.

பாடசாலை அதிபர் ரி.ஈஸ்பரன் தலைமையில் பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்ற அங்குரார்ப்பண பொதுக்கூட்டத்ன் போதே பழைய மாணவர் சங்கத்திற்கான நிருவாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.

தலைவராக பாடசாலை அதிபர் ரி.ஈஸ்பரன், செயலாளராக நாவிதன்வெளி உதவி பிரதேச செயலாளர் ந. நவநீதராஜா ,பொருளாளராக வங்கி உதவி முகாமையாளர் அ.வேளராசு,
உப செயலாளராக அபிவிருத்தி உத்தியோகஷ்தர் எஸ்.குமுதராஜ்,  கணக்கு பரிசோதகராக ஆசிரியர்  அ.வேணுதாஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும் நிருவாக உறுப்பினர்களாக ரி.ஜெயதேவ்(பொறியிலாளர்) ,அ.லெவ்விதன்(கலாச்சார உத்தியோகஸ்தர்) , க.சசீந்திரன்(இளைஞர் சேவை உத்தியோகஸ்தர்) , க.பிரதீப், பே.சுலக்சன்,  பு.சக்தன் ,ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

இக் கூட்டத்திற்கு துறைநீலாவணை மாகாவித்தியாலய பாடசாலையில் கல்வி கற்ற பழையமாணவர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.