“ உதிரம் கொடுப்போம் உயிர்களைக் காப்போம் “ மாபெரும் இரத்ததானம்


(லியோன்)

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி 
2005  ஆம் ஆண்டு க .பொ .த உயர்தர மாணவர்களின் அனுசரணையில் கல்லூரி அதிபர் ஆர் .பாஸ்கரன் தலைமையில் உதிரம் கொடுப்போம் உயிர்களைக் காப்போம் “எனும் தொனிப்பொருளில்   மாபெரும் இரத்ததான முகாம்  மட்டக்களப்பு  மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி பிரதான மண்டபத்தில்  நடைபெற்றது


மட்டக்களப்பு மெதடிஸ்த கல்லூரியின் 205 வது ஆண்டு நிறைவினை சிரப்பிக்கும் வகையில்  2005  ஆம் ஆண்டு க .பொ .த உயர்தர மாணவர்களினால்  5வது ஆண்டாக சிறப்பிக்கப்படுகின்றது .

கல்லூரி மாணவர்கள் சமூக  பணிகளை  மேற்கொள்ளவேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையிலும்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் நிலவுகின்ற இரத்த பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையிலும்  இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

இந்த இரத்ததான முகாம் காலை 09.00மணி முதல் பிற்பகல் 01.00மணி வரை நடைபெற்றது .

இந்த இரத்ததான  நிகழ்வில் கல்லூரி பழைய மாணவர் சங்க தலைவரும் , மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி செயலாற்றுப் பணிப்பாளருமான   எஸ் .சசிகரன்,  கல்லூரி பழைய மாணவர் சங்க முன்னாள் செயலாளரும், மட்டக்களப்பு பிராந்திய  நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளருமான எந்திரி டி ஜெ. பிரகாஷ் , , கல்லூரி பழைய மாணவர் சங்க உறுப்பினரும் ,மட்டக்களப்பு பிராந்திய டெலிகொம் நிறுவன பணிப்பாளர் வை .கோபிநாத் ,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப்பிரிவு வைத்தியர்   கே .ஹரிசாந்த்  மற்றும் வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் , 2005  ஆம் ஆண்டு கல்லூரி பழைய மாணவர்கள் ,பாடசாலை நலன் விரும்பிகள் ,பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ,கலந்துகொண்டனர்