காத்தான்குடி கடற்கரையில் நடைபெற்ற புனித நோன்புப் பெருநாள் தொழுகை


(லியோன்)


நாடளாவிய ரீதியில் இஸ்லாமியர்கள் இன்று தமது புனித நோன்புப் பெருநாள் பண்டிகையை அனுஷ்டிக்கின்றனர்
  

நோன்பு பெருநாளை முன்னிட்டு  முதல் அம்ச நிகழ்வாக  அனைவரும் தமது தொழுகை கடமையில்  ஈடுபட்டனர் .

இந்த நோன்பு பெருநாள் தொழுகையினை முன்னிட்டு  இன்று காலை மட்டக்களப்பு காத்தான்குடி  கடற்கரையில் விசேட தொழுகையும் , துவா பிரத்தினைகளும் இடம்பெற்றது .

காத்தான்குடி இஸ்லாமிய நிலையத்தின் ஒழுங்கமைப்பில்  காத்தான்குடி  கடற்கரையில் நடைபெற்ற புனித நோன்புப் பெருநாள் தொழுகை மௌலவி  அசேக் எம் எம் எம் மன்சூர் மதனி   தலைமையில் நடைபெற்றது .

இந்த விசேட பெருநாள் தொழுகை பிராத்தனையில் காத்தான்குடி பகுதி அனைத்து இஸ்லாமியர்களும் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்

பெருநாள் தொழுகையினை நிறைவேற்றிய பின் அனைவரும் தமது  நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை தமது உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொண்டனர் .

இதனை தொடர்ந்து  தமது பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளும் முகமாக  உறவினர்கள் , நண்பர்கள் மற்றும் அயலவர்களின் வீடுகளுக்கு சென்று  பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டதோடு உணவு பண்டங்களை பகிர்ந்து  கொண்டமை குறிப்பிடத்தக்கது .