(லியோன்)
நாடளாவிய ரீதியில் இஸ்லாமியர்கள் இன்று தமது புனித நோன்புப் பெருநாள்
பண்டிகையை அனுஷ்டிக்கின்றனர்
நோன்பு பெருநாளை முன்னிட்டு முதல் அம்ச நிகழ்வாக அனைவரும் தமது தொழுகை கடமையில் ஈடுபட்டனர் .
இந்த நோன்பு பெருநாள் தொழுகையினை முன்னிட்டு இன்று காலை மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரையில் விசேட தொழுகையும் , துவா பிரத்தினைகளும் இடம்பெற்றது .
காத்தான்குடி இஸ்லாமிய நிலையத்தின் ஒழுங்கமைப்பில் காத்தான்குடி
கடற்கரையில் நடைபெற்ற புனித நோன்புப் பெருநாள் தொழுகை மௌலவி அசேக் எம் எம் எம் மன்சூர் மதனி தலைமையில் நடைபெற்றது .
இந்த விசேட பெருநாள் தொழுகை பிராத்தனையில் காத்தான்குடி பகுதி அனைத்து
இஸ்லாமியர்களும் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்
பெருநாள் தொழுகையினை நிறைவேற்றிய பின் அனைவரும் தமது நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை தமது உறவுகளுக்கும்
நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொண்டனர் .
இதனை தொடர்ந்து தமது பெருநாள்
வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளும் முகமாக
உறவினர்கள் , நண்பர்கள் மற்றும் அயலவர்களின் வீடுகளுக்கு சென்று பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டதோடு
உணவு பண்டங்களை பகிர்ந்து கொண்டமை
குறிப்பிடத்தக்கது .