ஸ்ரீ சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய அலங்கார உற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வு


(லியோன்)

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட
மட்டக்களப்பு  எல்லை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர் வரும் 21 ஆம் திகதி வியாழக்கிழமை  தீர்த்தோற்சவதுடன் நிறைவுபெறும்
.

ஆலய உற்சவ குரு ஈசான சிவாசாரியார் குரு திலகம் சிவஸ்ரீ  சிவானந்தம் குருக்கள் தலைமையில் ஆலய பிரதம சி .கு சிவநேச .லவகுமார்  சர்மா  குருக்கள், சிவஸ்ரீ உதயகுமார் குருக்கள் ஆகியோர்  இணைந்து நடத்தப்பட்ட விசேட யாக பூஜை தொடர்ந்து ,பிரதான கும்பம் மற்றும் பரிபால மூர்த்திகளின் கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு  மூலமூர்த்தியாகிய  விநாயகருக்கு  அபிஷேகம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து வசந்த மண்டப பூசையுடன்  சுவாமி  உள்வீதி  உலா வருதல் இடம்பெற்று  கொடியேற்ற நிகழ்வு பூசையுடன் நிறைவு பெற்றது இந்த உற்சவத்தில் பெருமளவான பக்த அடியார்கள்  கலந்துகொண்டனர்